ADDED : அக் 15, 2025 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் மர்மமான முறையில் இறந்தன.
மந்தாரக்குப்பம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் வெண்ணிலா,41.இவர் தன்னுடைய வீட்டிற்கு அருகே உள்ள வயலில், நேற்று 6 ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். மாலை மேய்ச்சலுக்கு பின் திரும்பிய ஆடுகள் வீட்டின் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
புகாரின்பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் ஆடுகள் இறந்தது எப்படி என, விசாரித்து வருகின்றனர்.