ADDED : பிப் 20, 2026 05:06 AM
திட்டக்குடி: திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் 2ம் நாளாக வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர்.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், வருங்கால வைப்பு நிதி, ஓய்வு பெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணிகொடை ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு கல்லுாரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள், வகுப்புகளை புறக்கணித்து காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி, திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லு ாரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் இரண்டாம் நாளான நேற்று வகுப்புகளை புறக்கணித்து, கோரிக்கைகள் அடங்கிய பாதாகைகளை கையில் ஏந்தியபடி, 2ம் நாளாக வகுப்பு களை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுட்டனர்.

