/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை ரயில்பாதை அருகே கிடந்த எலும்பு கூடு மாயமான சிவகங்கை வாலிபர் என உறுதி
/
விருதை ரயில்பாதை அருகே கிடந்த எலும்பு கூடு மாயமான சிவகங்கை வாலிபர் என உறுதி
விருதை ரயில்பாதை அருகே கிடந்த எலும்பு கூடு மாயமான சிவகங்கை வாலிபர் என உறுதி
விருதை ரயில்பாதை அருகே கிடந்த எலும்பு கூடு மாயமான சிவகங்கை வாலிபர் என உறுதி
ADDED : ஆக 18, 2025 04:11 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே ரயில்பாதை யோரம் எலும்பு கூடாக கிடந்தவர், மாயமான சிவகங்கை வாலிபர் என்பது உறுதியானது.
சிவகங்கை மாவட்டம், மாத்துாரை சேர்ந்தவர் வீரபத்திரன். சென்னை, தாம்பரத்தில் தங்கி, நெய் வியாபாரம் செய்து வந்தார். இவரது மகன் பாண்டி, 25; திருமணமாகாத இவர், தந்தையுடன் தங்கி, வியாபாரம் செய்தார்.
கடந்த மாதம் 17ம் தேதி, பாண்டியை காணவில்லை என, வீரபத்திரன் தாம்பரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, பாண்டியின் மொபைல் எண் அழைப்புகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இதில், சென்னை-திருச்சி ரயில்வே மார்க்கத்தில், விருத்தாசலம் அடுத்த காட்டூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே அவரது மொபைல் போனை ஆடு மேய்க்கும் வாலிபர் ஒருவர் பயன்படுத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து தாம்பரம் போலீசார், லால்குடி போலீசாருடன் இணைந்து, வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.
அதில், காட்டூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே தண்டவாளத்தையொட்டி, மொபைல் கிடந்ததாகவும், அதில் சிம்கார்டை அகற்றிவிட்டு, பயன்படுத்தியதாகவும் கூறினார். வாலிபர் கூறிய இடத்திற்கு சென்று போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது, ரயில் பாதையொட்டி கருவேல முட்புதரில், உடல் முழுவதும் சிதைந்த நிலையில், எலும்பு கூடு கிடந்தது தெரிந்தது. விருத்தாசலம் ரயில்வே இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் எலும்பு கூடுகளை மீட்டு, அரியலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே எலும்புக்கூடு, மாயமான பாண்டியா என்பதை உறுதிப்படுத்த வீரபத்திரன் வரவழைத்து நேற்று அடையாளம் காணப்பட்டது. அதில், தனது மகன் தான் என்பதை அவர் உறுதிப்படுத்தினார். அதையடுத்து, எலும்பு கூடுகள், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த மாதம் 6ம் தேதி வீட்டிலிருந்து வெளியேறிய பாண்டி, சொந்த ஊருக்கு ரயிலில் சென்றபோது, தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனவும், மக்கள் நடமாட்டம் இல்லாத முட்புதரில் சிக்கியதால் யாரும் கவனிக்காமல், உடல் அழுகி, எலும்புக்கூடாகியது தெரியவந்தது.