/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீரட்டானேஸ்வரர் கோவிலில் சோமவார உற்சவம்
/
வீரட்டானேஸ்வரர் கோவிலில் சோமவார உற்சவம்
ADDED : நவ 20, 2024 07:20 AM

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத முதல்சோமவாரம் உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் கார்த்திகை மாதம் முதல் சோமவாரம் உற்சவம் முன்னிட்டு காலை 11:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு ஆகம விதிப்படி திருமஞ்சனம் நடந்தது.
மாலை 6:00 மணிக்கு வீரட்டானேஸ்வரர் சுவாமி நாகபரணத்துடன் கூடிய புஷ்ப அலங்காரத்திலும், அம்பாள் பெரியநாயகி வெள்ளி அங்கி சாத்துபடி புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு 7:30 மணிக்கு உற்சவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமி அலங்கார மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு 8:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.