/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடும்ப தகராறில் மகன் கொலை தந்தைக்கு காப்பு
/
குடும்ப தகராறில் மகன் கொலை தந்தைக்கு காப்பு
ADDED : நவ 08, 2024 02:14 AM
வேப்பூர்:கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 70. இவரது மகன் முத்துசாமி, 47, கொத்தனார். தந்தை, மகன் இடையே குடும்ப பிரச்னை இருந்தது.
நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு வழக்கம் போல இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், ஆறுமுகம் கோபித்துக் கொண்டு, வீட்டில் இருந்த தனது பொருட்களை எடுத்துக் கொண்டு, மரத்தடியில் உட்கார்ந்து கொண்டார்.
சற்று நேரம் கழித்து அங்கு வந்த முத்துசாமியை, ஆறுமுகம் தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். முத்துசாமின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள், ரத்த வெள்ளத்தில் ஆபத்தான நிலையில் கிடந்த அவரை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.
வேப்பூர் போலீசார் ஆறுமுகத்தை கைது செய்தனர்.

