ADDED : டிச 23, 2025 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: மகனை கண்டுபிடித்து தரக்கோரி தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலுார் அடுத்த திருமாணிக்குழி, மாவெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் காத்தவராயன் மகன் ஜெயச்சந்திரன்,25; கடந்த 20ம் தேதி தனது தாயிடம் வெளியே சென்று வருவதாக கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து ஜெயச்சந்திரனின் தாய் ஜெயந்தி அளித்த புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

