sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சவுந்திரசோழபுரம் பாலம் பணி ஏழு ஆண்டுகளாக கிடப்பில்: இணைப்பு சாலை அமைக்காமல் 2 மாவட்ட மக்கள் பாதிப்பு

/

சவுந்திரசோழபுரம் பாலம் பணி ஏழு ஆண்டுகளாக கிடப்பில்: இணைப்பு சாலை அமைக்காமல் 2 மாவட்ட மக்கள் பாதிப்பு

சவுந்திரசோழபுரம் பாலம் பணி ஏழு ஆண்டுகளாக கிடப்பில்: இணைப்பு சாலை அமைக்காமல் 2 மாவட்ட மக்கள் பாதிப்பு

சவுந்திரசோழபுரம் பாலம் பணி ஏழு ஆண்டுகளாக கிடப்பில்: இணைப்பு சாலை அமைக்காமல் 2 மாவட்ட மக்கள் பாதிப்பு


ADDED : நவ 21, 2024 05:55 AM

Google News

ADDED : நவ 21, 2024 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: ஏழ ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு வெள்ளாறு மேம்பாலப் பணியை விரைந்து முடிக்ககடலுார், அரியலுார் ஆகிய இருமாவட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றின் குறுக்கே தற்காலிக செம்மண் சாலையை பயன்படுத்தி, அரியலுார், கடலுார் இருமாவட்டங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம், அரியலுார், ஜெயங்கொண்டம், கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

மழை காலங்களில் தொழுதுார் அணைக்கட்டு, ஆனைவாரி மற்றும் உப்பு ஓடைகளில் இருந்து வரும் மழைநீர் வெள்ளாற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, தற்காலிக செம்மண் சாலை அடித்து செல்லப்பட்டு, போக்குவரத்து பாதிப்பது வழக்கம். இதனால் இருமாவட்ட மக்களும் தலா 15 கி.மீ., சுற்றி வெளியூர் செல்ல வேண்டியுள்ளது.

இதனால் பெண்கள், மாணவர்கள், முதியோர் மிகவும் பாதித்தனர். பாதிப்பை போக்க வெள்ளாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும் என, இரு மாவட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதையேற்று, கடந்த 2018ல் நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரூ. 10 கோடியே 86 லட்சத்து 485 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிதாக மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது.

பாலம் கட்டும் பணிகள் முடிந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக பாலத்தின் இருபுறமும் உள்ள கிராமங்களை இணைக்கும் சாலைப்பணி துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் தற்காலிக செம்மண் சாலை துண்டிக்கப்பட்டு இருமாவட்ட கிராம மக்கள் சுற்றிச்செல்வது மட்டும் இதுவரை தொடர்கிறது.

எனவே, கிடப்பில் போடப்பட்ட கிராமங்களை இணைக்கும் சாலை பணியை விரைந்து முடித்து போக்குவரத்தை துவக்க கடலுார், அரியலார் மாவட்ட கலெக்டர்கள், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us