
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
சேர்மன் ஜெயந்தி தலைமை தாங்கி, மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கான சான்றிதழையும், துாய்மை பணியாளர்களுக்கு தாட்கோ அடையாள அட்டைகளையும் வழங்கினார். முகாமில், 15 துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு 43 சேவைகளை வ ழங்கினர்.
ஏராளமான பெண்கள், மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பங்கள் வழங்க குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. துணைத் தலைவர் கிரிஜா, கமிஷனர் கிருஷ்ணராஜன், தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் மணிவண்ணன், மாவட்ட பிரதிநிதி வேலு, வி.சி., நகர செயலாளர் திருமாறன் பங்கேற் றனர்.