/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பூதாமூரில் சிறப்பு மருத்துவ முகாம்
/
பூதாமூரில் சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : நவ 22, 2024 06:17 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் பூதாமூரில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
முகாமிற்கு, மங்கலம்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் பாலச்சந்தர் தலைமை தாங்கினார்.
மருத்துவர் லாவண்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். அதைத்தொடர்ந்து டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் மாவட்ட மலேரியா அலுவலர் (பொறுப்பு) மூர்த்தி, மங்கலம்பேட்டை சுகாதார மேற்பார்வையாளர் துளசிதாஸ், நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல், துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், செங்குட்டுவன், மங்கலம்பேட்டை சுகாதார ஆய்வாளர்கள் முருகவேல், ராஜ்மோகன், சதீஷ்குமார் மற்றும் கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.