/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சித்தர்களுக்கு பவுர்ணமி சிறப்பு பூஜை
/
சித்தர்களுக்கு பவுர்ணமி சிறப்பு பூஜை
ADDED : பிப் 02, 2026 03:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: சித்தர்களுக்கு நடந்த பவுர்ணமி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நடுவீரப்பட்டு, கைலாசநாதர் கோவிலில் உள்ள பச்சைகேந்திரசுவாமிகள், எருக்கம்பால்சித்தர் ஆகிய சுவாமிகளுக்கு நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
இதையொட்டி நேற்று மதியம் 12:00 மணிக்கு சித்தர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன.
மதியம்1:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அமுது படைத்தல் நடந்தது.
அதேபோல் சி.என்.பாளையம் மலையாண்டர் கோவிலில் உள்ள குழந்தைசுவாமி சித்தருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

