ADDED : செப் 22, 2025 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவில் அமாவாசை சிறப்பு பூஜைகள் நடந்தது.
நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் உள்ள பச்சைகேந்திர சுவாமிகள், எருக்கம்பால் சித்தர் சுவாமிக்கு அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது.
இதே போன்று, சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் உள்ள குழந்தைசுவாமி சித்தருக்கு சிறப்பு ேஹாம பூஜைகள், அபிஷேக ஆராதனை நடந்தது.
தொடர்ந்து, பூர்ணாஹூதி நடந்து, கலசங்கள் ஆலய உலாவாக வந்து சித்தருக்கு கலச அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.