ADDED : டிச 28, 2025 06:14 AM

புவனகிரி: புவனகிரி கண்ணதாசன் இலக்கிய பேரவை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நேற்று நடந்தது.
புவனகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த பேச்சு போட்டிக்கு, கண்ணதாசன் பேரவை தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் வரவேற்றார். விழா குழு மோகன்தாஸ், பிரிதிவ்ராஜன், நெடுமாறன், பொன்னம்பலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஜெயராமன், ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் வழக்கறிஞர் குணசேகரன், தலைமை ஆசிரியர் தியாகராஜன் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். பல்வேறு தலைப்புகளில் நடந்த பேச்சு போட்டியில், மேல்நிலை பள்ளி அளவில், சந்துரு, உயர்நிலை பள்ளி அளவில் கீர்த்தனா, வெங்கடேசன், அன்பழகன் ஆகியோரும், தொடக்க நிலை பள்ளி அளவில் துரைமணிராஜன், சத்தியநாராயணன்,முருகன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு தேர்வு செய்தனர்.
மூன்று நிலைகளில், தலா 3 லேபர் வீதம் 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

