ADDED : ஜன 18, 2025 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார், வன்னியர்பாளையத்தில் காமராஜ் நகர் மனை வாங்கியோர் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் பொங்கல் விளையாட்டு விழா நடந்தது.
மாநகராட்சி கவுன்சிலர் கிரேசி தலைமை தாங்கினார். சங்கத் தலைவர் தேவராஜ் முன்னிலை வகித்தார். செயலாளர் லோகு வரவேற்றார். ராதாகிருஷ்ணன் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். விளையாட்டுப் போட்களில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
விழாவில், தி.மு.க., இளைஞரணி அகஸ்டின் பிரபாகர், கலியமூர்த்தி, சோமசுந்தரம், கவிராஜ், ஆரோக்கியதாஸ், உதயசெல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.
கலியன் நன்றி கூறினார்.