
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்: விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
விழாவிற்கு ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக்குழும தலைவர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். பள்ளி இயக்குநர் தினேஷ் முன்னிலை வகித்தார்.
பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின், வெண் புறாக்களைப் பறக்க விட்டு ஒலிம்பிக் சுடர் ஏற்றி வைத்து விளையாட்டுப் போட்டிகள் துவங்கின.
மாணவர்கள் பல்வேறு சாகசங்கள் செய்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் பள்ளி முதல்வர் நித்யா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

