ADDED : நவ 23, 2025 06:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப் பள்ளியில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் நேற்று நடந்தது. இதில் சுற்றுப்பகுதி கிராமங்களான அம்பலவாணன்பேட்டை, வழுதலம்பட்டு, ஆயிக்குப்பம், அகரம், கட்டியங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த கர்ப்பிணிகள், முதியவர்கள் மருத்துவ பரிசோதனைகள் மற்றும், சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
குள்ளஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சைகள் வழங்கினர். கடலுார் மாவட்ட மருத்துவ துறை அலுவலர்கள் முகாமில் கலந்து கொண்ட கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினர்.

