/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்: கலெக்டர் துவக்கி வைப்பு
/
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்: கலெக்டர் துவக்கி வைப்பு
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்: கலெக்டர் துவக்கி வைப்பு
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்: கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 17, 2025 12:38 AM

பண்ருட்டி : உங்களுடன் ஸ்டாலின் சிறப்ப முகாம் நேற்று முன்தினம் சிதம்பரத்தில் முதல்வர் துவக்கிவைத்தார்.
இதனையடுத்து நேற்று பண்ருட்டி நகராட்சி வார்டு 1,2,3, ஆகிய வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. முகாமை கடலுார் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
இதில் நகராட்சி பொறியாளர் கண்ணன், மேலாளர் காதர்கான், துணை சேர்மன் சிவா, மாவட்ட துணை செயலாளர்கள் தணிகைசெல்வம், ஆனந்திசரவணன், கவுன்சிலர்கள் ரமேஷ், முகமது அனிபா, நகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.