/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மருத்துவ மாணவர் உடலுக்கு அரசு மரியாதை
/
மருத்துவ மாணவர் உடலுக்கு அரசு மரியாதை
ADDED : பிப் 17, 2025 01:45 AM

புவனகிரி: சிதம்பரம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த மருத்துவ மாணவரின் உடல் தானமாக வழங்கப்பட்ட நிலையில், மாணவர் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
கடலுார் மாவட்டம், புவனகிரி மெயின் ரோட்டை சேர்ந்தவர் தமிழொளி, இவரது மகன் சரண், 20; புதுச்சேரி பிள்ளையார்குப்பம் இந்திரா காந்தி பல் மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்ண்டு பி.டி.எஸ்., படித்து வந்தார்.
இவர், கடந்த கடந்த 13ம் தேதி இரவு, தந்தையுடன், புவனகிரியில் இருந்து சிதம்பரத்திற்கு அரசு பஸ்சில் சென்றபோது, தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சரண் மூளைச்சாவு அடைந்ததாக தெரிவித்தனர்.
அதையடுத்து, மாணவர் சரண் குடும்பத்தினர், அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். அதையடுத்த, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.
அதனையடுத்து, நேற்று காலை புவனகிரியில் உள்ள வீட்டில், சரண் உடலுக்கு சிதம்பரம் சப் கலெக்டர் (பொறுப்பு) சந்திரசேகரன், புவனகிரி தாசில்தார் கணபதி, சிதம்பரம் டி.எஸ்.பி., லாமேக் உள்ளிட்ட அதிகாரிகள, அரசு சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

