ADDED : ஆக 24, 2025 07:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் :சிதம்பரம், பெரியார் தெருவில் துருவாச முனிவர் தரிசனம் செய்த நர்த்தன விநாயகர் என, அழைக்கப்படும் கூத்தாடும் விநாயகர் கோவில் உள்ளது. இங்கு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும், இரவுவிநாயகர் வீதியுலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, 5ம் நாள் உற்சவமாக, தெருவடைச்சான் சப்பரத்தில், விநாயகர் வீதியுலா நடந்தது. அதனை தொடர்ந்து,9ம்நாள் விழாவாக, வரும் 26ம் தேதி தேர்த் திருவிழா நடக்கிறது.