
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பூர் :வேப்பூர் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமியையொட்டி, மாணவர் சேர்க்கை நடந்தது.
பள்ளி தாளாளர் கதிரவன் தலைமை தாங்கினார். துணை தாளாளர் அவினாஷ், நிர்வாக அலுவலர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். அதில், எல்.கே.ஜி., முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சேர்க்கை நடந்தது. பள்ளியில் சேர்க்கை பெற்ற குழந்தைகளுக்கு 'அ' எழுத்து எழுத வைத்து கல்வி பயணத்தை ஆசிரியர்கள் துவக்கி வைத்தனர்.