ADDED : டிச 06, 2024 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : வயிற்று வலி காரணமாக மாணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பரங்கிப்பேட்டை அடுத்த சேந்திரக்கிள்ளை இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் வீரவேல், 19;
சி.முட்லுார் அரசு கல்லுாரியில் புள்ளியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இந்நிலையில் நேற்று மீண்டும் வயிற்று வலி ஏற்படவே, விரக்தியடைந்த வீரவேல் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.