ADDED : ஜன 22, 2025 09:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி, : பண்ருட்டி அருகே பள்ளிக்கு சென்ற மகள் மாயமானது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
பண்ருட்டி அடுத்த முத்துநாராயணபுரம் அய்யனார் நகர் சேர்ந்தவர் சுந்தர். இவரது மகள் திவ்யா,16; பாலுார் அரசு அரசு பள்ளியில் பிளஸ்1 படித்துவந்தார்.
நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு மாணவி திவ்யா வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றார். மாலை வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் சுந்தர கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.