ADDED : செப் 22, 2025 11:23 PM
அ நிறம் | அளவு
குள்ளஞ்சாவடி : மகனை காணவில்லை என, தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.
குள்ளஞ்சாவடி அடுத்த மேல்பூவாணிகுப்பத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் தமிழ் அமுதன், 17; கடலுார் அரசு கலைக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர். நேற்று முன்தினம் காலை வீட்டை விட்டு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாய் மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
