ADDED : டிச 27, 2024 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அருகே பிளஸ்2 மாணவன் மாயமானது குறித்து, ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலுார் அடுத்த சுபா உப்பலவாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மகன் அருள்பிரகாஷ்,17. மஞ்சகுப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். கடந்த 21ம் தேதி மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவரை காணவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.