நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த கல்லுாரி மாணவி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருத்தாசலம் அடுத்த பழையபட்டிணம் கிரா மத்தை சேர்ந்தவர் தமிழன்பன். இவரது மனைவி அகல்யா, 21; இவர் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் பி.ஏ., மூன்றாமாண்டு படித்து வந்தார்.
இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில், அகல்யா தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் மீண்டும் அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த அகல்யா வீட்டில் உள்ள மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

