sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

செம்மண் லாரிகளால் மாணவர்கள் அச்சம்

/

செம்மண் லாரிகளால் மாணவர்கள் அச்சம்

செம்மண் லாரிகளால் மாணவர்கள் அச்சம்

செம்மண் லாரிகளால் மாணவர்கள் அச்சம்


ADDED : மார் 20, 2024 05:02 AM

Google News

ADDED : மார் 20, 2024 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு செம்மண் குவாரிக்கு வரும் டாரஸ் லாரிகள் அதிவேகமாக செல்வதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

நடுவீரப்பட்டு சுற்றியுள்ள மலைபகுதிகளில் உள்ள செம்மண் குவாரி களுக்கு தினமும் நூற்றுக் கணக்கான டாரஸ் லாரிகள் வந்து செம்மண் ஏற்றி செல்கிறது. இந்த குவாரிகள் உள்ள சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.

ஆரம்பசுகாதார நிலையத்திற்கு பொதுமக்களும், பள்ளிக்கு மாணவர்களும் வந்து செல்லும் சாலையில், செம்மண் ஏற்றிய டாரஸ் லாரிகள் அதிவேகமாக சென்று வருகிறது.

இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. லாரிகளின் மேற்பகுதியில் தார்பாய் போட்டு மூடாமல் செல்வதால் மண்புழுதி பறப்பதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் லாரிகள் பள்ளி நேரத்தில் இயக்கப்படுவதை நிறுத்தவும், செம்மண் புழுதி பறக்காமல் இருக்க தார்பாய் போட்டு மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us