sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அதிவேக செம்மண் லாரிகளால் மாணவர்கள் திக்...திக்...

/

அதிவேக செம்மண் லாரிகளால் மாணவர்கள் திக்...திக்...

அதிவேக செம்மண் லாரிகளால் மாணவர்கள் திக்...திக்...

அதிவேக செம்மண் லாரிகளால் மாணவர்கள் திக்...திக்...


ADDED : ஜூலை 17, 2025 07:01 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு பகுதியில் பள்ளி நேரத்தில் செம்மண் லாரிகள் இயக்கப்படுவதால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், குமளங்குளம் உள்ளிட்ட பகுதியில் செம்மண் குவாரிகள் இயங்கி வருகிறது.

இந்த குவாரிகளுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான கனரக லாரிகள் செம்மண் ஏற்றி செல்கின்றன. லாரிகள் காலை மற்றும் மாலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக அதிவேகமாக இயக்கப்படுகிறது.

இதனால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சில நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. குமளங்குளம் குவாரியில் இருந்து செம்மண் ஏற்றி வரும் லாரிகள் நடுவீரப்பட்டு வழியாக தான் செல்கிறது.

குறிப்பாக, பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நடமாட்டம் மிகுந்த நேரத்தில் அதிவேகமாக செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். லாரியின் மேல்பகுதி தார்பாய் போட்டுமூடாமல் செல்வதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களில் மண் பறந்து சிரமத்திற்கு ஆளாகினர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us