ADDED : மார் 16, 2025 07:22 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்; தாய் புகாரின் பேரில், மாயமான நர்சிங் மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ஒடப்பன்குப்பம் பாலமுருகன் மகள் கீர்த்தனா, 18. விருத்தாசலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் டிப்ளமோ நர்சிங் முதலாமாண்டு படிக்கிறார். கடந்த 13ம் தேதி வழக்கம்போல் கல்லுாரிக்கு வந்த அவர், வீட்டிற்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது தாய் ஜெயமாலா புகாரின் பேரில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, மாணவியை தேடி வருகின்றனர்.
