நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; மாயமான கல்லுாரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி மகள் ரேகா,19. தனியார் பொறியியல் கல்லுாரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 30ம் தேதி கோவிலுக்கு சென்று வருவதாக கூறிச்சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ரேகாவின் பாட்டி சவுந்தரி கொடுத்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.