/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வயிற்று வலியால் அவதிப்பட்டவர் தற்கொலை
/
வயிற்று வலியால் அவதிப்பட்டவர் தற்கொலை
ADDED : மார் 18, 2024 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி, : பண்ருட்டி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பண்ருட்டி அடுத்த சூரக்குப்பம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம், 50. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்தது. கடந்த 16ம் தேதி வலி அதிகமானதால், விஷம் குடித்தார்.
அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

