sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி.பாரி ஆலையில் கரும்பு அரவை துவக்கம்

/

நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி.பாரி ஆலையில் கரும்பு அரவை துவக்கம்

நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி.பாரி ஆலையில் கரும்பு அரவை துவக்கம்

நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி.பாரி ஆலையில் கரும்பு அரவை துவக்கம்


ADDED : ஜன 18, 2025 02:10 AM

Google News

ADDED : ஜன 18, 2025 02:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையில் முக்கிய பட்ட கரும்பு அரவை துவக்க விழா நடந்தது.

நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையில் முக்கிய பட்ட கரும்பு அரவை துவக்க விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.பூஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார். இணை உபத்தலைவர் பாண்டியன்,கரும்பு பிரிவு முதுநிலை இணை உபத்தலைவர் சங்கரலிங்கம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இது குறித்து முதுநிலை கிளைத்தலைவர் சங்கரலிங்கம் கூறியதாவது: கரும்புக்கு மட்டுமே நிலையான விலை உள்ளது. ஆட்கள் தேவையை குறைக்க 4.5 அடி இடைவெளியில் கரும்பு பயிரிட்டால் நடவு முதல் அறுவடை வரை இயந்திரங்களை பயன்படுத்த முடியும்.

சொட்டுநீர் முறையை கடைபிடித்தால் தண்ணீர்,உரம் தேவை குறையும்.மகசூல் அதிகரிக்கும்.எனவே விவசாயிகள் புதிய தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி கரும்பு பயிரிட்டு அதிக லாபம் பெறலாம்.

நடப்பு பருவத்தில் 21 கரும்பு வெட்டும் இயந்திரம் மூலம் அறுவடை செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். ஆலை மூலம் அறிவித்துள்ள ஊக்கதொகை திட்டங்களை பயன்படுத்தி விவசாயிகள் அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து பயன் பெறலாமென கூறினார். விழா ஏற்பாடுகளை உதவி பொது மேலாளர் தேவராஜன், சிவராமன் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us