நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த கல்லுாரி மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருத்தாசலம் செல்வராஜ் நகரைச் சேர்ந்தவர் மணிவாசகன், பழைய இரும்பு வியாபாரி. இவரது மகன் தினேஷ்குமார், 22, திட்டக்குடி அரசு கல்லுாரியில் பி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், தினேஷ்குமார் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் அவருக்கு மீண்டும் வலி ஏற்பட்டது. இதில் மனமுடைந்தவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்த கொண்டார்.
விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

