/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கல்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கல்
ADDED : ஜன 03, 2024 06:24 AM

கடலுார் : கடலுார் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முப்பருவ கல்வி முறை நடைமுறையில் உள்ளது. இரண்டாம் பருவத்திற்கான அரையாண்டு தேர்வுகள் முடிந்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, நேற்று 2ம் தேதி, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதை தொடர்ந்து, நேற்று கடலுார் மாவட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. கடலுார் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் புத்தகம் வழங்கினர்.