/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்
/
சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்
ADDED : நவ 09, 2024 07:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார், புதுவண்டிப்பாளையம் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது.
கடலுார், புதுவண்டிப்பாளையம் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் வீதியுலா நடந்தது வந்தது.
கடந்த 6ம் தேதி வேல் வாங்கும் நிகழ்வு நடந்தது. நேற்று முன்தினம் காலை வீரபாகு தேவருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, சஷ்டி மகா அபிேஷகம், இரவு சூரம்சம்ஹாரம் நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று (9ம் தேதி) இரவு 7:00 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது.