sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகள் சாவில் சந்தேகம்: பெற்றோர் போராட்டம்

/

மகள் சாவில் சந்தேகம்: பெற்றோர் போராட்டம்

மகள் சாவில் சந்தேகம்: பெற்றோர் போராட்டம்

மகள் சாவில் சந்தேகம்: பெற்றோர் போராட்டம்


ADDED : டிச 01, 2024 07:19 AM

Google News

ADDED : டிச 01, 2024 07:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த பெ.பூவனுாரை சேர்ந்தவர் செல்வம் மகள் கவிதா, 21. இவருக்கும், விருத்தாசலம் அடுத்த பரவளூரை சேர்ந்த கண்ணன் மகன் பத்மநாபன், 27, என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணமானது.

மூன்று முறை கருக்கலைந்து விட்டதால் மனமுடைந்த கவிதா, நேற்று முன்தினம் இரவு துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கேரளாவில் கூலி வேலைக்கு சென்ற கவிதாவின் தந்தை செல்வம், தாய் கலையரசி ஆகியோர் நேற்று போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது என புகார் கொடுத்தனர். அதன்பேரில், ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரைக்கு செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கவிதாவின் பெற்றோர் செல்வம், கலையரசி ஆகியோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், வரதட்சனை கேட்டு தனது மகளை அடித்து கொலை செய்த பத்மநாபனை கைது செய்ய வேண்டும் எனக் கூறி கடலுார் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.

ஆர்.டி.ஓ., விசாரணை நடப்பதால் பிரேத பரிசோதனை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை ஏற்று, அவர்கள் புறப்பட்டு சென்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us