sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகன் சாவில் சந்தேகம் தாய் போலீசில் புகார் 

/

மகன் சாவில் சந்தேகம் தாய் போலீசில் புகார் 

மகன் சாவில் சந்தேகம் தாய் போலீசில் புகார் 

மகன் சாவில் சந்தேகம் தாய் போலீசில் புகார் 


ADDED : செப் 23, 2024 07:37 AM

Google News

ADDED : செப் 23, 2024 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில் ஆற்றங்கரையில் இறந்து கிடந்த வாலிபர் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கடலுார் அடுத்த தாழங்குடா வேல்டு விஷன் நகரை சேர்ந்த முருகன் மகன் பிரவின், 27; மீன் பிடி தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் அசோக், வான்மதன் ஆகியோர், பிரவினை மீன் பிடிக்க கடலுக்கு போட்டில் அழைத்து சென்றனர். மீன்பிடிக்க சென்ற பிரவின் நேற்று காலை தட்சிணாமூர்த்தி நகர் தென்பெண்ணை ஆற்றின் கரையில் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் தமிழ்செல்வி, ரெட்டிச்சாவடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us