ADDED : மார் 12, 2026 04:36 AM

சிதம்பரம்: தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அடுத்த, கீரப்பாளையம் கிராமம், மேட்டு தெருவை சேர்ந்தவர்கள், நேற்று காலை, தனி பட்டா கேட்டு, தாசில்தார் அலுவலக வாசல் தரையில் அமர்ந்து, முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தாசில்தார் ஹரிதாஸ் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது அவர்கள், அரசு சார்பில் இலவச மனை பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் நிலையில், 25 ஆண்டுகள் ஆகியும், கிராம கணக்கில் இதுவரை திருத்தம் செய்யப்படவில்லை. இங்கு வசிப்பவர்களுக்கும் தனி தனி பட்டா வழங்கப்படவில்லை,' என தெரிவித்து, மனு அளித்தனர். அவர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

