UPDATED : செப் 17, 2026 04:32 PM
ADDED : செப் 17, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷ்னராக ஜீவிதா பொறுப்பேற்றார்.
நெல்லிக்குப்பம் நகராட்சி களிஷனர் கிருஷ்ணராஜன் கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். அதனையொட்டி, பண்ருட்டி நகராட்சி கமிஷனர் காஞ்சனா கூடுதலாக நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷ்னர் பதவியை கவனித்து வந்தார்.
இந்நிலையில் திருநின்றவூரில் பணியாற்றிய ஜீவிதா நேற்று காலை நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷ்னராக பொறுப்பேற்றார். அவருக்கு சேர்மன் ஜெயந்தி மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
