sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கூடைபந்து போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன்

/

கூடைபந்து போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன்

கூடைபந்து போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன்

கூடைபந்து போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன்


ADDED : செப் 11, 2025 03:30 AM

Google News

ADDED : செப் 11, 2025 03:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்: பாஞ்சாபில் நடந்த தேசிய அளவிலான கூடை பந்து போட் டியில் தமிழ்நாடு அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

18 வயதிற்குற்பட்ட 75 வது தேசிய அளவிலான 2024-25ம் ஆண்டிற்கான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேற்று முன்தினம் பஞ்சாபில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, மஹாராஷ்டிரா, ஒடிசா, புதுடில்லி, அசாம், ஹரியானா, ராஜஸ் தான் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஏராளமான மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.

இதில் தமிழ்நாடு அணி சார்பில் கடலுார் மாவட்டத்தை சேர்ந்த என்.எல்.சி., விளையாட்டு பள்ளி முன்னாள் மாணவர் அஸ்வின் உட்பட 12 மாணவர்கள் போட்டியில் பங்கேற்று திறமையை வெளிபடுத்தினர்.

அனைத்து போட்டி முடிவுகளில் தமிழக அணி ஒட்டு மொத்தமாக முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இரண்டாம் இடத்தை பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணி மூன்றாம் இடத்தையும் வென்றது. இதில் என்.எல்.சி., விளையாட்டு பள்ளி முன்னாள் மாணவர் அஸ்வின் போட்டியில் பங்கேற்று சாம்பியன்ஷிப் பட்டம் பெற்று தமிழக அணிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

தமிழ்நாடு அணி சார்பில் போட்டியில் பங்கேற்று சாம்பியன்ஷிப் வெற்றி பெற்ற அஸ்வினை என்.எல்.சி.,பள்ளி கல்வி செயலாளர் பிரபாகரன், விளையாட்டு பள்ளி தாளாளர் நாராயணன், தலைமையாசிரியர் ஜாக்கப், பயிற்சியாளர், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us