/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மது பிரியர்களை ஏமாற்றிய டாஸ்மாக் நிர்வாகம்
/
மது பிரியர்களை ஏமாற்றிய டாஸ்மாக் நிர்வாகம்
ADDED : ஜன 14, 2026 05:15 AM
டா ஸ்மாக் கடைகளில், மதுபானங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் மது அருந்திய பின், காலி பாட்டில்களை அதே கடைகளில் திரும்ப வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தியது.
அதில், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்குபவர்கள், அதே கடையில் காலி பாட்டில்களை வழங்கினால் ரூ.10 வழங்கப்படுமென அரசு கூறியது. இதனை நம்பி மது பிரியர்கள் ரூ. 10 லாபம் கிடைக்கும் என மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால், மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நிர்ணய விலையை விட கூடுதலாக ரூ., 10 வாங்கிய நிலையில், தற்போது ரூ., 20 வாடிக்கையாளரிடம் வாங்குகின்றனர்.
அதில், காலி பாட்டில்களை அதே கடையில் வழங்கினால், வாடிக்கையாளர்களிடம் பெறும் ரூ., 20 பணத்தில் ரூ., 10 திரும்ப வழங்குகின்றனர்.
பாட்டில் தராவிட்டால் ரூ., 20 திரும்ப பெற மு டியாது. ஏற்கனவே மது பாட்டிலுக்கு ரூ., 10 பெற்று வாடிக்கையாளர்களின் பணத்தை பெற்ற டாஸ்மா க் நிர்வாகம், காலி மதுபாட்டில்களுக்கு ரூ.10க்கு வாடிக்கையாளர்களிடம் பணத்தை பெற்று தருவதால் டாஸ்மாக் நிர்வாகம் மீது மது பிரியர்கள் அதிருப்தியில் உள் ளனர்.

