/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டாஸ்மாக் சரக்கு கூடுதல் விலைக்கு விற்றவர் கைது
/
டாஸ்மாக் சரக்கு கூடுதல் விலைக்கு விற்றவர் கைது
ADDED : அக் 12, 2024 05:40 AM
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே அரசு அனுமதியின்றி, டாஸ்மாக் சரக்கு கூடுதல் விலைக்கு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த சின்னகுமட்டி ரோட்டுத் தெருவில் அரசு அனுமதியின்றி டாஸ்மாக் சரக்கு கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குசென்றனர்.
அங்கு, டாஸ்மாக் சரக்கு கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த நாகப்பனை, 50; போலீசார்கைது செய்தனர். அவரிடமிருந்து, 10 குவாட்டர் பாட்டில்களை பறி முதல் செய்தனர்.
இதுகுறித்து, பரங்கிப் பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.