ADDED : மே 20, 2025 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே சாலையோர வாய்க்காலில் டாடா ஏஸ் வேன் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது.
பெண்ணாடத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி டி.என். 68 - ஏ.ஏ. 0573 பதிவெண் கொண்ட டாடா ஏஸ் வேன் நேற்று காலை 10:30 மணிக்கு திட்டக்குடி- விருத்தாசலம் சாலையில் சென்று கொண்டிருந்தது. வேனை பெ.பூவனுார் சுரேஷ்,47; என்பவர் ஓட்டினார்.
சின்னகொசப்பள்ளம் பஸ் நிறுத்தம் அருகே வேன் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாசன வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக சுரேஷ் உயிர் தப்பினார். சம்பவம் குறித்து பெண்ணாடம் போலீசார் விசாரிக்கின்றனர்.