/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலி சக்ராலயா மோட்டார்சில் டாடா பேட்டரி வாகனம் விற்பனை
/
நெய்வேலி சக்ராலயா மோட்டார்சில் டாடா பேட்டரி வாகனம் விற்பனை
நெய்வேலி சக்ராலயா மோட்டார்சில் டாடா பேட்டரி வாகனம் விற்பனை
நெய்வேலி சக்ராலயா மோட்டார்சில் டாடா பேட்டரி வாகனம் விற்பனை
ADDED : ஜன 12, 2024 04:09 AM

கடலுார்: நெய்வேலி சக்ராலயா மோட்டார்சில் டாடா பேட்டரி வாகனம் விற்பனை துவக்க விழா நடந்தது.
டாடா மோட்டார்சின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரான நெய்வேலி கிளை சக்ராலயா மோட்டார்சில் டாடா டியாகோ-இவி பேட்டரி வாகனம் விற்பனை துவக்க விழா நடந்தது. பொது மேலாளர் ரவிச்சந்திரன் குத்துவிளக்கேற்றி விற்பனையை துவக்கி வைத்தார்.
முதல் வாகனத்தை குறிஞ்சிப்பாடி தொழிலதிபர் விஜயலட்சுமி கோபி பெற்றுக் கொண்டார். டாடா நெக்ஸான்-இவி வாகனத்தை நெய்வேலி டிரான்ஸ்போர்ட் ஒப்பந்ததாரர் முத்து பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து சக்ராலயா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர்கள் துரைராஜ், கோமதி துரைராஜ் கூறுகையில், 'பேட்டரி வாகன விற்பனையில் இந்தியாவில் முதல் இடத்தில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா டியாகோ-இவி, டாடா டிகோர்- இவி, டாடா நெக்ஸான்-இவி மாடல்களை தயாரித்து விற்பனை செய்கிறது.
தரமான லித்தியம் அயன் பாஸ்பேட் பொருந்திய பேட்டரி உள்ளது. இது ஐபி 67 மதிப்பீட்டை பெற்றுள்ளதால் தண்ணீர் மற்றும் மாசு உள்ளே செல்லாதவாறு தயாரிக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.
இதன் விலை 9 லட்சம் ரூபாய் முதல் உள்ளது. பயண செலவு 90 சதவீதம் வரை சேமிக்கலாம்' என்றனர்.