/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாணவியிடம் சில்மிஷம் 'போக்சோ'வில் ஆசிரியர் கைது
/
மாணவியிடம் சில்மிஷம் 'போக்சோ'வில் ஆசிரியர் கைது
ADDED : மார் 17, 2025 05:54 AM

விருத்தாசலம் : மங்கலம்பேட்டையில் பிளஸ் 2 மாணவியிடம் சில்மிஷம் செய்த டியூஷன் ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டை, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ராயர் மகன் வெங்கடேசன், 42; சொந்தமாக டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். கடந்த 14ம் தேதி காலை டியூஷனுக்கு வந்த பிளஸ் 2 மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
அதிர்ச்சியடைந்த மாணவி, டியூஷனை விட்டு வெளியேறி, பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
பெற்றோர், மாணவியை அழைத்து வந்து, விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி, டியூஷன் ஆசிரியர் வெங்கடேசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
இவருக்கு திருமணமாகி மனைவி, 18 மற்றும் 13 வயதில் மகன், மகள் உள்ளனர்.