sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண் குளியலறையில் கேமரா; வாலிபர் தற்கொலை முயற்சி

/

பெண் குளியலறையில் கேமரா; வாலிபர் தற்கொலை முயற்சி

பெண் குளியலறையில் கேமரா; வாலிபர் தற்கொலை முயற்சி

பெண் குளியலறையில் கேமரா; வாலிபர் தற்கொலை முயற்சி


ADDED : ஜன 25, 2025 05:08 AM

Google News

ADDED : ஜன 25, 2025 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : இளம்பெண் வீட்டின் குளியலறையில் மொபைல் போன் கேமரா பொருத்திய வாலிபர் போலீஸ் விசாரணைக்கு பயந்து ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது.

கடலுார் பகுதியை சேர்ந்த 23 வயது பெண் நேற்று காலை தனது வீட்டில் குளிக்க சென்றார். அப்போது, குளியலறை ஜன்னலில் மொபைல் போன் கேமரா ஆன் செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து பெண்ணின் தரப்பினர் அளித்த புகாரின் பேரில், முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மொபைல் போனை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தினர். அதில், 30 வயது வாலிபருக்கு சொந்தமான மொபைல் போன் எனத் தெரிந்தது.

அவரிடம் விசாரணை நடத்த போலீசார் வீட்டிற்கு சென்றனர். இதையறிந்த வாலிபர், வீட்டில் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடன், அவரை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இச்சம்பவம் கடலுாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us