ADDED : நவ 01, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம்பேட்டை அடுத்த முத்தனங்குப்பம் பூராசாமி மகன் சிவராஜ், 33. இவர் நேற்று முன்தினம் மாலை கத்தியை வைத்துக் கொண்டு பொது இடத்தில் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தார்.
ஆலடி சப் இன்ஸ்பெக்டர் துரைகண்ணு வழக்குப் பதிந்து, சிவராஜை கைது செய்தார்.