/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமி கர்ப்பம் போக்சோவில் வாலிபர் கைது
/
சிறுமி கர்ப்பம் போக்சோவில் வாலிபர் கைது
ADDED : ஜன 19, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அரியலுார் மாவட்டம், செந்துறை அடுத்த சிலுப்பனுார் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் வீரமணி, 26.
இவர், பெண்ணாடம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியிடம், ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகியுள்ளார். இதனால், சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார்.
இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, வீரமணியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

