ADDED : மார் 17, 2025 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம் : திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டைச் சேர்ந்தவர் சபீர், 39; தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு புதுச்சத்திரம் அடுத்த மேட்டுப்பாளையம் வளைவில், சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது, சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற, கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.