ADDED : பிப் 02, 2026 03:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்:கடலுார் வள்ளலார் கோவில்களில் தைப்பூச ஜோதி தரிசன விழா நடந்தது.
கடலுார் பீச்ரோடு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் (ஜோதி வழிபாடு நிலையம்) தைப்பூச பெருவிழாவையொட்டி நேற்று காலை அகவல் ஓதுதல், சிறப்பு பூஜைகள், ஜோதி வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதே போன்று, புதுப்பாளையம் கழுத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளலார் கோவிலிலும் சிறப்பு பூஜை, ஜோதி வழிபாடு நடந்தது. ஏற்பாடுகளை வள்ளலார் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

