sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தொகுப்பு வீடுகள் இடியும் அபாயம் சாத்துக்கூடல் கீழ்பாதி மக்கள் அச்சம்

/

தொகுப்பு வீடுகள் இடியும் அபாயம் சாத்துக்கூடல் கீழ்பாதி மக்கள் அச்சம்

தொகுப்பு வீடுகள் இடியும் அபாயம் சாத்துக்கூடல் கீழ்பாதி மக்கள் அச்சம்

தொகுப்பு வீடுகள் இடியும் அபாயம் சாத்துக்கூடல் கீழ்பாதி மக்கள் அச்சம்


ADDED : டிச 15, 2024 06:41 AM

Google News

ADDED : டிச 15, 2024 06:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : தொடர் மழையால், சாத்துக்கூடல் கீழ்பாதி ஊராட்சியில் ஓடை நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து, தேங்கி நிற்பதால் கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் கீழ்பாதி ஊராட்சியில் ஆயிரகணக்கானோர் வசிக்கின்றனர். இவ்வழியாக செல்லும் சின்ன ஓடையில் இருந்து அதிகளவு மழைநீர் வெளியேறி புது காலனி அம்பேத்கர் நகரில் தேங்கியது. தொடர் மழையால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததில் வீட்டு உபயோகப் பொருட்கள், துணிகள் நனைந்தன.

மேலும், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளின் மேற்கூரை, சுவர்கள் விரிசல் விழுந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. மழைநீர் வடிந்தால் மட்டுமே மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பும்.

பாதிக்கப்பட்ட பகுதியை தாசில்தார் உதயகுமார், ஊராட்சி தலைவர் சக்திவேல் ஆகியோர் பார்வையிட்டனர். மழைநீர் தேங்கிய பகுதியில் வசிப்போருக்கு உணவு வழங்கப்பட்டது.

இரண்டு நாட்களுக்கு மேலாக தேங்கிய மழைநீரில் மக்கள் வசித்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வட்டார சுகாதாரத் துறையினர் கிராம மக்களுக்கு பரிசோதனை செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us