/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் தொடர்மழை வடக்குத்தில் 35 மி.மீ., பதிவு
/
மாவட்டத்தில் தொடர்மழை வடக்குத்தில் 35 மி.மீ., பதிவு
மாவட்டத்தில் தொடர்மழை வடக்குத்தில் 35 மி.மீ., பதிவு
மாவட்டத்தில் தொடர்மழை வடக்குத்தில் 35 மி.மீ., பதிவு
ADDED : நவ 15, 2024 04:23 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று வடக்குத்தில் அதிகபட்சமாக 35 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
கடலுார் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் வரும் 16ம் தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதன்படி கடந்த 2 நாட்களாக கடலுாார் மாவட்டத்தில் அவ்வப்போதுமழை பொழிவதும், பின்னர் வெயிலடிப்பதுமாக இருந்தது.
நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணி வரையில், வடக்குத்தில் அதிகபட்சமாக 35 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மேலும், சேத்தியதோப்பு 30.2, வானமாதேவி 25.6, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி 25. ஸ்ரீமுஷ்ணம் 24.1, கொத்தவாச்சேரி 23, கடலுார் 21.6, பண்ருட்டி 21.4, குறிஞ்சிப்பாடி 21, புவனகிரி 21, கலெக்டரேட் 19,8, வேப்பூர் 12, சிதம்பரம் 10, லால்பேட்டை 10, விருத்தாசலம் 10, மேமாத்துார் 10, பெலாந்துறை 8.6, காட்டுமயிலுார் 8, பரங்கிப்பேட்டை த7.8, குப்பனத்தம் 7.4, கீழ்ச்செருவாய் 7, அண்ணாமலைநகர் 6.5, லக்கூர் 5.3, காட்டுமன்னார்கோவில் 4.4, தொழுதுார் 2மி.மீ. மழை பெய்துள்ளது.